எட்டமநாயக்கன்புதூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் விழா

52பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருகே எட்டமநாயக்கன்புதூர் கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீராஜகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் வேதமந்திம் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்றது. பின்னர் புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் பண்ணாடி கோதண்டபாணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you