கொடைக்கானல்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லை

50பார்த்தது
கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் தெருநாய்கள் கடித்து 10 மேற்பட்டோர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் மேலும் இதில் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளையும் கடித்து கொதறி உள்ளது தெருநாய்

இந்நிலையில் இன்று கொடைக்கானல் எம் எம் தெரு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த தெரு நாய் அங்கு பள்ளிக்குவந்து கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியதில் குழந்தை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது

மேலும் இதனைப் பற்றி கொடைக்கானல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் கொடைக்கானலில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டே தான் வருகிறது

மேலும் தெருநாய்களை கொல்லக்கூடாது என்று ப்ளூ கிராஸ் எனும் அமைப்பினர்களால் நீதிமன்றத்தில் தடை வாங்கிவைத்துள்ளனர்

மேலும் இத்தடை வாங்கி வைத்துள்ள குழுவினர் தாங்கள் சொகுசு பங்களாவில்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட கொடைக்கானல் நகராட்சி மாவட்ட நிர்வாகம் மற்றும்மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொடைக்கானல் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் தெருநாய்களை கட்டுக்குள் கொண்டு வந்து தெருநாய்களிடமிருந்து பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளை காக்க வேண்டும் என்று கொடைக்கானல் வாழ் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :