வீட்டின் சுவர் ஏறிக் குறித்து திருட முயன்ற வாலிபர் கைது

85பார்த்தது
வீட்டின் சுவர் ஏறிக் குறித்து திருட முயன்ற வாலிபர் கைது
நத்தம் தர்பார் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (65). விவசாயி. இவரது வீட்டில் நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறிக் குதித்து வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். இதைப் பார்த்த ராஜசேகரன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து நத்தம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கேசம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் (30) என்பதும், வீட்டில் புகுந்து திருட வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மீது மேலூர், மேலவளவு காவல் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி