பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை அறிவிப்பு

1039பார்த்தது
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை அறிவிப்பு
சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் மின் தடை அறிவிப்பு

பழனி கோட்டத்திற்குட்பட்ட சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் 12.6.2024ஆம் தேதி அன்று பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, தாசரிப்பட்டி, மற்றும் ராமபட்டிணம்புதூர் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பழனி செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.