பீருக்காக குழந்தையை விற்க முயன்ற தம்பதி கைது

84பார்த்தது
பீருக்காக குழந்தையை விற்க முயன்ற தம்பதி கைது
அமெரிக்காவின் வடமேற்கு அர்கான்சாஸ் பகுதியைச் சேர்ந்த டெரைன் அர்பன் (21), ஷலினி எக்லர்ஸ் (20) தம்பதிக்கு ஓர் குழந்தை உள்ளது. இந்த குழந்தையை ரூ.84,000 (1000 டாலர்) பணத்துக்காகவும், பீருக்காகவும் விற்க முயல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசுக்கு, குழந்தையை விற்க இருவரும் ஒப்பந்தம் மேற்கொண்டு கையெழுத்திட்டது தெரியவந்தது. உடனே தம்பதியை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ், பின்னர் பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி