கராத்தே அசோசியேசன் சார்பாக கத்தா, குமிட்டே பயிற்சி முகாம்

565பார்த்தது
சிங்காநல்லூர் பகுதியில் கோவை மாவட்டம் கராத்தே அசோசியேசன் சார்பாக கத்தா, குமிட்டே பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியானது சாய் காய் டூ கராத்தே தமிழ்நாடு பிரசிடெண்ட் தலைவர் சாய்புரூஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நாமக்கல், தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு காலை முதல் மாலை வரை அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், 4 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்று வந்த முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி முகாம் மற்றும் இறுதி தேர்வும் நடைபெற்றது. இந்த மாணவ மாணவிகளின் எதிர்காலம் கருதியும் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வதற்கும், எந்த ஒரு கஷ்ட சூழ்நிலையிலும் தாங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் அதே சமயம் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சார்பாகவும், சங்கங்களின் சார்பாகவும் நடத்தப்படுகின்ற பயிற்சியில் சாதிப்பது எப்படி என்று பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆசிய கராத்தே நடுவர் அறிவழகன் செய்திருந்தார். இதில் சீனியர் மாஸ்டர் ஜெயபிரகாஷ், மற்றும் தலைமை பயிற்சியாளர்கள் மோகன், கார்த்திக், செல்வசங்கர், ரவிசங்கர், முருகானந்தம், N. மோகன், செல்வகுமார், ராஜேஷ், நாசர் தீன், வெள்ளிங்கிரி, சிவகுமார், சீதாலட்சுமி, சுசிலா, தங்கம், சரவணன், மனோஜ், பிரகதீஷ் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி