உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் பயங்கர சாலை விபத்து நடந்து ஒரு குழந்தையின் உயிரைப் பறித்தது. அதிக வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குடிசைக்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.