தெருவிளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து நம் முன்னோர்கள் பலர் படித்து பெரியவர்கள் ஆன கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சமீபத்தில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழிலதிபர் ஹர்ஷா கோயங்கா என்பவர், தெரு விளக்கின் கீழ் விடாமுயற்சியுடன் படிக்கும் சிறுவனின் புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். 'கல்வி இல்லாத குழந்தைகள்.. இறக்கை இல்லாத பறவைகள் போல' என்று ஒரு பழமொழியும் அவர் அதனுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். ஏழைகளில் கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.