20 வயது இளம்பெண் ஆணவப்படுகொலை

4205பார்த்தது
20 வயது இளம்பெண் ஆணவப்படுகொலை
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் ஆணவப்படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 வயது இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டு, அரிசி மூட்டையில் கட்டி ஆற்றில் வீசப்பட்டார். ஆற்றங்கரையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இளம்பெண்ணின் காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு பிடிக்காததால், இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக இளம்பெண்ணின் தந்தை, சகோதரர் மற்றும் மாமாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.