ஆம்னி பேருந்து லாரி மீது மோதியதில் 4 பேர் பலி

15953பார்த்தது
ஆம்னி பேருந்து லாரி மீது மோதியதில் 4 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆம்னி பேருந்து லாரி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மதுராந்தகம் அருகே புக்கத்துறையில் ஆம்னி பேருந்து, லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி