பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 26 பேர் பலி

63பார்த்தது
பெரு நாட்டில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். தலைநகர் லிமாவில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆண்டியன் பகுதிக்கு பேருந்து புறப்பட்டது. இந்த நிலையில், பேருந்து 650 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்து நேற்று (ஜுலை 16) அதிகாலை 5 மணியளவில் நடந்தது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.