பெரம்பலூரை சேர்ந்த யுகேஷ் (20) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அவரது ஊரைச் சேர்ந்த மணியரசி (15) என்ற பள்ளி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. காதலுக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த யுகேசும், மணியரசியும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இருவரின் உடலையும் ஒரே இடத்தில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.