விருதுநகர்: முடிவுற்ற வளர்ச்சி பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆத்திகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை மற்றும் ஆத்திகுளம் விளக்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6.50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை, கம்பிக்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை மற்றும் முஷ்டகுறிச்சி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 16.41 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம், மற்றும் திருவிருந்தாள்புரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி