வந்தே பாரத் ரயில்கள் மாடு மோதினால் கவிழ்ந்துவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது X பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த விஷயத்துக்கு பதில் அளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சகம், "வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயங்கும். கால்நடைகள் மீது எதிர்பாராத விதமாக மோதினாலும் ஒன்றும் ஆகாது. கவாச் தொழில்நுட்ப அமைப்பு உள்ளதால் விபத்துகள் முன்கூட்டியே தவிர்க்கப்படும். சில சமயத்தில் கால்நடை மீது மோதும் சூழல் உண்டாகினாலும் ரயிலுக்கு ஒன்றும் ஆகாது" என கூறியுள்ளது.