சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராயன் (9) என்ற சிறுவன் அண்மையில், தேங்கிய மழைநீரில் நடந்து சென்றபோது அவனை மின்சாரம் தாக்கியது. அப்போது அவ்வழியாக வந்த கண்ணன் என்ற இளைஞர் தனது உயிரை பணயம் வைத்து துரிதமாக செயல்பட்டு அச்சிறுவனை மீட்டார். அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இளைஞர் கண்ணனை அழைத்து பாராட்டி தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.