மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது

76பார்த்தது
மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது
மேல்மலையனுாரில் ஒன்றிய கூட்டம் நடந்தது. ஒன்றிய மன்ற கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி. டி. ஓ. , க்கள் சிவசண்முகம், சையத் முகமத் வரவேற்றனர்.

கூட்டத்தில், மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. செஞ்சி கோட்டையை பாரம்பரிய சின்னமாக அறிவித்த மத்திய அரசுக்கும், முதல்வருக்கும், முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கும் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கிருஷ்ணமூர்த்தி, ஷாகினர்ஷத், யசோதரை, துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி