அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

80பார்த்தது
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகராட்சி கோணாமேடு அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோனாமேடு நகராட்சி உயர்நிலைபள்ளியில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் முன்னிலையில் , நகர திமுக செயளாலர் சாரதிகுமார் மரக்கன்றுகள் நடவு செய்து தொடங்கி வைத்தார். பின்னர் நகரஉறுப்பினர் பிரகாசம் வழிநடத்த, தலைமை ஆசிரியர்கள் சுகுணா, வேல்விழி உறுதிமொழி ஏற்க சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை பசுமை நண்பர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஆளுக்கொரு மரக்கன்றுகள் நடவு செய்தனர். சிறப்பு மரக்கன்றுகளாக வேங்கை, அத்தி, ஜம்புநாவல், கஸ்கஸா, தாண்ட்ரிக்காய், மகோகனி, வேப்பன், புங்கன் நடவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி