திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சூதாட்டம் அதிகளவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு மூன்று ஆட்டங்களாக 10 லட்சம் 15 லட்சம் 20 லட்சம் என்ற விகிதத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து உடனடியாக மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.