கதிநாயக்கன்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

83பார்த்தது
முதல்வர் கோப்பைக்கான போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழாவில் கலந்து கொண்டனர்.

 இதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லீனா மாநில அளவில் முதல் பரிசு மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் கமலேஷ் முதல்வர் கோப்பைக்கான போட்டியில் முதல் பரிசு, 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நிசாந்தினி ஜூடோ போட்டியில் 3 ஆம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கணிதவியல் ஆசிரியர் ஹரி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கந்திலி ஒன்றிய திமுக செயலாளர் மோகன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி