திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி டவுன் 5 கண்பாலம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயிலுக்கு சொந்தமான கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மிதப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் டவுன் விஏஓ தண்டபாணிக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விஏஓ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது உரை கிணற்றில் சடலமாக பெண் மிதப்பது தெரிய வந்தது. உடனடியாக வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அங்கு எதற்காக சென்றார் கிணற்றில் தவறி விழுந்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.