திருவண்ணாமலை மத்திய மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக இன்று (செப்.29) ஆரணியில் கழக செயல்வீரர்கள் , வீராங்களை கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் எல். ஜெயசுதா, கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
உடன் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை, வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.