திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் இன்று (அக்.,5) புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர் முன்னதாக வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வெங்கடே பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.