திருச்சி: பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து திருட்டு

51பார்த்தது
திருச்சி: பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து திருட்டு
திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர் திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார், பின்னர் நேற்று 28ஆம் தேதி வழக்கம்போல் காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் சட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 80 கிலோ எடை கொண்ட காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 50,000 ஆகும். இதுகுறித்து பொன் குமார் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி