குளியலறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

53பார்த்தது
குளியலறையில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
முசிறி அருகே உள்ள தா. பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி செல்லம்மாள் வயது 75 வாதநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி வீட்டில் குளியலறையில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செல்லம்மாள் நேற்று (அக்.03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த செல்லம்மாளின் மகன் தங்கராசன் அளித்த புகாரின் பேரில் செல்லம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த தா. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி