மணப்பாறையை அடுத்த கல்பாளையத்தான்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் மகன் ஜெனிஸ் ராஜா (37). இவா், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா். அவ்வப்போது மதுபோதையில் மணப்பாறை காவல்நிலையத்தில் வந்து ரகளை செய்வது வழக்கமாம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு காவல்நிலையத்தில் தலைமைக் காவலா் லாரன்ஸ்மேரி(38) என்பவா் பணியிலிருந்தபோது வழக்கம்போல் மதுபோதையில் இரும்புக் கம்பியுடன் காவல் நிலையம் வந்த ஜெனிஸ்ராஜா, தலைமைக் காவலரிடம் தகாத வாா்த்தைகளைப் பேசி மிரட்டியுள்ளாா்.
அதனைத்தொடா்ந்து உதவி ஆய்வாளா் தினேஷ் தலைமையிலான போலீஸாா் ஜெனிஸ்ராஜாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.