போலீசில் சிக்கிய பைக் திருடன்

84பார்த்தது
போலீசில் சிக்கிய பைக் திருடன்
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள சுண்ணாம்புகாரன்பட்டியை சேர்ந்தவர் செல்வேந்திரன் இவர் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி அன்று சோமரசம்பேட்டை ஹோலி கிராஸ் பள்ளி அருகே தனது பைக்கை நிறுத்தி வைத்து விட்டு சென்ற பொழுது அது காணாமல் போனது. இது குறித்து அவர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் போலீசார் விசாரணையில் அவரது இருசக்கர வாகனத்தை திருடிய கரூர் மாவட்டம் கீழவெளியூரை சேர்ந்த தென்னரசு என்பவரை கைது செய்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி