நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சிதம்பரம். இவருக்கு இரு மகள்கள் உள்ளன. மூத்த மகளான அமிர்தா
பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில், அவர்சரிவர படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் (செப்.,29) அமிர்தாவை சிதம்பரம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அமிர்தா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் தற்போது இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.