தேனி அல்லிநகரம் நகராட்சி 9வது வார்டில் உள்ள சுடுகாட்டில் ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி இன்று (அக். 09) பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன், கமிஷனர் ஏகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.