கோழி கூடையில் கை விட்ட மூதாட்டி பாம்பு கடித்து பலி

60பார்த்தது
கோழி கூடையில் கை விட்ட மூதாட்டி பாம்பு கடித்து பலி
கர்நாடக மாநிலத்தின் ஹரிஹர பல்லத்தட்கா கிராமத்தை சேர்ந்தவர் தேவம்மா (67). இவர் நேற்று (ஜூன் 2) காலை மாட்டுத் தொழுவத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோழி முட்டையிட்டுக் கொண்டிருந்த கூடைக்குள் கையை வைத்தபோது நாகப்பாம்பு கடித்தது. உடனடியாக அருகில் உள்ள மூலிகை மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட தேவம்மா பின்னர் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது.