விவசாயிகளின் தோழன், பி. சீனிவாசராவ் நினைவு தினக்கூட்டம்

70பார்த்தது
விவசாயிகளின் தோழன், பி. சீனிவாசராவ் நினைவு தினக்கூட்டம்
ஒடுக்கப்பட்ட, அடக்குமுறைக்கு ஆளான, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக போராடிய பி. சீனிவாசராவ் 63 ஆவது நினைவு தினக் கூட்டம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பேராவூரணி அண்ணாசிலை அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, வி. தொ. ச ஒன்றியச் செயலாளர் மு. சித்திரவேலு தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பா. பாலசுந்தரம். வி. தொ. ச மாவட்டச் செயலாளர் சி. பக்கிரிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஐ ஒன்றியச் செயலாளர் சி. வீரமணி, வி. தொ. ச மாநிலக்குழு வி. ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

மூத்த தோழர் பாரதி வை. நடராஜன், சிபிஐ ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, வி. தொ. ச ஒன்றியத் தலைவர் பி. ஏ. கருப்பையா, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், அறநெறி மக்கள் கட்சி ஆயர் த. ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பி. சீனிவாசராவ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி