பெண்ணின் போட்டோவை ஆபாசமாக பரப்பியவர் கைது

2924பார்த்தது
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்  தன்னை பழிவாங்கும் நோக்கத்திற்காக அடையாளம் தெரியாத நபர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருவதாகவும், இதை தடுத்து புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் காவல் நிலையத் தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் அறிவுறுத்தலின் படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் வழிகாட்டுதலின் பேரில் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெண்ணின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் வெளியிட்ட நபர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஷாஜி முகமது என தெரிய வந்தது. இதனை அடுத்து நேற்று (20.02.2024)  ஷாஜி  முகமதுவை  போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.  

மேலும் குற்றத்திற்கு பயன்படுத்திய ஆன்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you