

சிவகங்கை: 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; பாய் வியாபாரிக்கு கடும் சிறை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்தவர் 63 வயதான முருகேசன். இவர் பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் நிலையில் அவரை கைது செய்த சிங்கம்புணரி காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் முருகேசன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு நீதிபதி கோகுல் முருகன் 20 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுடன் அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டார். போக்சோ வழக்கில் பாய் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.