ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர் சித்தோட்டில் நெசவு தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அங்கிருந்து புறப்பட்டு சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள திருவள்ளிப்பட்டி போயர் தெருவில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் உன் மனைவியிடம் ஏன் பிரச்சனை செய்கிறாய்? ஒழுங்காக ஊருக்கு சென்று குடும்பம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது சிவக்குமார் வீட்டில் உள்ள விட்டத்தில் பொருத்தியுள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.