சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). தொழிலாளி. இவருக்கு கலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்ாதினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சதீஷ் இரும்பாலை காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.