பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பார்வையற்றோர் நல்லெண்ண சங்க சேலம் மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார்.
வேலையில் இல்லாதோருக்கான உதவி தொகையை ரூ. 1, 000- த்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.