சேலம் கலெக்டர் ஆபீஸ் முன் தந்தை மகள்கள் தீக்குளிக்க முயற்சி

79பார்த்தது
சேலம் கலெக்டர் ஆபீஸ் முன் தந்தை மகள்கள் தீக்குளிக்க முயற்சி
சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த மதுமிதா என்பவர் தனது தந்தை ஆறுமுகம், சகோதரி தீபிகா ஆகியோருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அங்கு நின்றிருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாரிடம் மதுமிதா கூறும்போது, நாங்கள் குடும்பத்தினருடன் நெசவு தொழில் செய்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மூலம் அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டினோம். இதற்கான மானிய தொகை வழங்கப்படவில்லை. பல ஆண்டுகள் ஆகிவிட்டது. வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை எங்களால் திருப்பி செலுத்தமுடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். கடன்காரர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்கின்றனர்.

இதனால் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மேலும், எனது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்க கூட எங்களிடம் வசதி இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அரசு மானியத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி