வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை

81பார்த்தது
வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை
சேலம் தாதகாப்பட்டியை அடுத்த செல்லக்குட்டி காடு பாண்டு ரங்கன் விட்டல் கோவில் பகுதியை சேர்ந்த பத்மநாபன் மனைவி விசாலாட்சி (வயது 75). விசாலாட்சிக்கு விபத்தில் 2 கால்களும் உடைந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந் தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அவர் கட்டிலில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். போலீசார் விரைந்து சென்று விசாலாட்சி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அன்னதானப் பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணை யில் விசாலாட்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

சேலம் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். பெயிண்டர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (38). கண வன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற் பட்டு உள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த புவனேஸ்வரி உடலில் மண்எண் ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் வெந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி