மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது இருந்து கீழே குதித்த வாலிபர்

72பார்த்தது
மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது இருந்து கீழே குதித்த வாலிபர்
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து திடீரென கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உறவினர்கள் ஏராளமானவர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து உறவினர்கள் கூறும் போது, அஜித்குமாரிடம் இருந்து நேற்று போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். அதனை அவர் போலீஸ் நிலையத்துக்கு சென்று திருப்பி கேட்ட போது கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றனர். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி