எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க உழைத்திட வேண்டும்

68பார்த்தது
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க உழைத்திட வேண்டும்
சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஆத்தூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வி.பி. சேகர் வரவேற்றார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மோகன் கலந்து கொண்டு பேசியதாவது: -

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை கண்டு அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சி விடக்கூடாது. 2026-ம் ஆண்டு தேர்தல் மிக முக்கியமான தேர்தல், தமிழக மக்களை காப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய இருக்கிற தேர்தல். இரட்டை இலை சின்னத்தை சுவரில் வரைந்தாலே அது வெற்றியின் சின்னமாக மாறி விடும். எனவே அ.தி.மு.க. வினர் துவண்டு விடக்கூடாது. இன்னும் 18 மாதங்கள் தான் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க கடுமையாக உழைக்க வேண்டும். மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதனை நிறைவேற்ற ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும் களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஜெயசங்கரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே. முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி