சிங்கிபுரம் துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள, வாழப்பாடி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை(செப்.20) காலை 11 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்தில், வாழப்பாடி கோட்ட மின் நுகர்வோர் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கோட்ட மின் செயற்பொறியாளர் முல்லை கேட்டுக்கொண்டுள்ளார்.