திருமயம்: காரையூர் அருகே புகையிலை விற்றவர் கைது!

66பார்த்தது
திருமயம்: காரையூர் அருகே புகையிலை விற்றவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காரையூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் குளவாய்ப்பட்டி பகுதியில் உள்ள பெட்டி கடையில் ஆய்வு செய்த போது புகையிலை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து பெட்டிகடை உரிமையாளர் குமரேசன் என்பவரை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலையை பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி