சிக்கன் பிரியாணியில் கிடந்த பிளாஸ்டிக் கவர்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

64பார்த்தது
சிக்கன் பிரியாணியில் கிடந்த பிளாஸ்டிக் கவர்: வாடிக்கையாளர் அதிர்ச்சி
பிரியாணி என்றால் அனைவருக்கும் ஐதராபாத் பிரியாணியும் ஞாபகத்துக்கு வரும். ஐதராபாத்தில் தடுக்கி விழுந்தால் பிரியாணி கடை என ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளது. சமீபத்தில் மணிகொண்டாவை சேர்ந்த ஒருவர் ஸ்விக்கியில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது பிரியாணியில் சிக்கன் துண்டுகளுடன், நன்கு சமைத்து பொரித்த பிளாஸ்டிக் கவர் கிடைத்தது. இதைக் கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். இதை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.