பரமத்தி வேலூரில் பூக்களின் விலை சரிவு

52பார்த்தது
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 400-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 200-க்கும், அரளி கிலோ ரூ. 250-க்கும், ரோஜா கிலோ ரூ. 200- க்கும், முல்லைப் பூ கிலோ ரூ. 600-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 200-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 800-க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 500-க்கும் ஏலம் போனது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 300-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 150-க்கும், அரளி கிலோ ரூ. 200-க்கும், ரோஜா கிலோ ரூ. 260-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ. 500-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 300-க்கும், கனகாம்பரம் ரூ. 600-க்கும், காக்கரட்டான் ரூ. 600-க்கும் ஏலம் போனது. சுப முகூா்த்தங்கள் இல்லாததால் குண்டு மல்லிகைப் பூ விலை சரிவைடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்தி