மழைக்கால முன்னெச்சரிக்கை: சுகாதாரப் பணி தீவிரம்

51பார்த்தது
மழைக்கால முன்னெச்சரிக்கை: சுகாதாரப் பணி தீவிரம்
மழைக்கால முன்னெச்சரிக்கை நோய்த்தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக திருமருகல் ஊராட்சி பகுதியில் முழுத்தூய்மை சுகாதாரப் பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்றது. திருமருகல் வட்டார பொது சுகாதாரத் துறையும், திருமருகல் ஊராட்சி நிர்வாகமும் இணைந்து மேற்கொண்ட இப்பணியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஊராட்சி தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 25-ந்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்கேற்றனர். கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், மண் பானைகள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் போன்ற பொருட்கள் அகற்றப்பட்டன.

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மழைக்காலத்தில் பரவும் நோய்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருமருகல் வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் அறிவுறுத்தலின் பேரிலும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குமார் தலைமையிலும் நடைபெற்ற முழுத் தூய்மைப் பணியை திருமருகல் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தன், அபினேஷ், நவீன், விஜயகுமாரி, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து பணிகளை மேற்பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி