மாநிலம் முழுவதும் 1500 ரேஷன் கடைகளில் செல்ஃபி பாயிண்ட்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்களை அமைக்க தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்கள் மூலம் பாஜகவுக்கு மைலேஜ் அதிகரிக்கப்படுவதே இதன் பின்னால் இருக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் இதேபோன்று அம்மாநில அரசு செல்ஃபி பாயிண்ட்களுக்கு அனுமதி மறுத்திருந்தது.