மதுரை: TN- Alert செயலியை பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

50பார்த்தது
மதுரை: TN- Alert செயலியை பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்
மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் கைப்பேசி செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும், இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அவசர கால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 1077 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண்: 1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி