சோழவந்தான்: ஷேர் ஆட்டோ மோதி முதியவர் பலி

64பார்த்தது
சோழவந்தான்: ஷேர் ஆட்டோ மோதி முதியவர் பலி
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (74) என்பவர் மதுரை சோழவந்தான் அருகே உள்ள மட்டப்பாறை - கரட்டுப்பட்டி சாலையில் மிதிவண்டியில் நேற்று முன்தினம் (நவ. 28) சென்று கொண்டிருந்த போது, பயணிகள் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து இவரது மிதிவண்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த இருவர் பலத்த காயமடைந்து சோழவந்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர் சசிகுமார் மீது சோழவந்தான் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி