பட்டவன் கோவில் திருவிழாவில் மாடு மாலை தாண்டும் நிகழ்வு

68பார்த்தது
பட்டவன் கோவில் திருவிழாவில் மாடு மாலை தாண்டும் நிகழ்வு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பில்லூர் ஊராட்சி கம்புளிநாயக்கன்பட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு பசாப்புப்பாலையப்பட்டு மந்தையில் பட்டவன் கோவில் உள்ளது. கம்புளிநாயக்கர் வகையரா மற்றும் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட இந்த பட்டவன் கோவில் திருவிழா கடந்த 24. 9. 2024 வியாழக்கிழமை அன்று பசாப்புப்பாலையப்பட்டு மந்தையில் கம்புளிநாயக்கர் வகையராக்கள் தலைமையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது.

அன்று முதல் பசாப்புப்பாலையப்பட்டு மந்தையை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து பட்டவன் சாமிக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முதல் நாள் திருவிழாவில் பட்டவன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வான வேடிக்கையுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இன்று மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 14 மந்தையர்கள் கலந்து கொண்டது. எல்லை கோட்டை நோக்கி சுமார் 300 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது.

இதில் வாலியம்பட்டி கோனதாதா நாயக்கர் மந்தைமாடு முதலாவதாகவும், பேரூர் தாதல்மாதாநாயக்கர் மந்தை மாடு இரண்டாவதாகவும், 3 ஆவது மாடாக தொப்பம்பட்டி பிட்டமநாயகர் மந்தை மாடு ஓடி வந்து எல்லை கோட்டை தாண்டியது. எழும்பிச்சை பழம் வெற்றி பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி