செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் இயங்கி வரும் பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரங்க திறப்பு விழா நடைபெற்றது கல்லூரியின் தலைவர் புகழேந்தி தனபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் மற்றும் வி ஜி பி குழும தலைவர் டாக்டர் சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டு அரங்கத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி மாணவ மாணவியரின் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சியில் திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி கல்லூரியின் செயலாளர் அமிர்தவர்ஷினி புகழேந்தி முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னுசாமி கல்லூரி பொறுப்பு முதல்வர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த அரங்கம் 2200 க்கும் மேற்பட்டோர் அமரும் வகையிலும் குளிர்சாதன வசதியுடன் கூடியதாகவும் அதிநவீன ஒலி ஒளி வசதிகள் பொருத்தியதாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தாரா சுதாகர் ராணி எல்லப்பன் சோபனா தங்கம் சுந்தர் கௌதமி ஆறுமுகம் ராஜாராம் உள்ளிட்டோருடன் ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் துணைச் செயலாளர் வெண்பேடு ரமேஷ் பேரூராட்சி தலைவர் தேவராஜ் திமுக பொறுப்பாளர்கள் கே ஏ எஸ் சுதாகர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் என பலர் உடனிருந்தனர்.