அரசு கலை கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு 12ல் துவக்கம்

62பார்த்தது
அரசு கலை கல்லுாரியில் முதற்கட்ட கலந்தாய்வு 12ல் துவக்கம்
உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம். ஜி. ஆர். , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024- - 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம், காலை 9: 30 மணிக்கு துவங்குகிறது.

இதில், பி. எஸ்சி. , கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு தகுதி மதிப்பெண் 400 லிருந்து 272 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

வரும் 13ம் தேதி காலை 9: 30 மணிக்கு பி. காம். , வணிகவியல் பாடப்பிரிவிற்கு தகுதி மதிப்பெண் 400 லிருந்து 246 வரை உள்ளவர்களுக்கும், வரும் 14ம் தேதி காலை 9: 30 மணிக்கு பி. ஏ. , தமிழ் பாடப்பிரிவில் சிறப்பு தமிழ் பயின்ற அனைவருக்கும், பொதுத்தமிழில் 100 முதல் 71 மதிப்பெண் வரை பெற்றவர்களும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
காலை 11: 00 மணிக்கு பி. ஏ. , ஆங்கிலம் பாடப்பிரிவுக்கு தகுதி மதிப்பெண் 100 முதல் 42 வரை உள்ள இக்கல்லுாரிக்கு விண்ணப்பித்த மாணவ - -மாணவியர் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பங்கேற்போர் இணையவழி விண்ணப்பம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் மூலச்சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஜாதி, வருமான சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி புத்தகம் மற்றும் மேற்கண்ட சான்றிதழ்களின் இரு நகல்கள் மற்றும் 3 புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும்.

தொடர்புடைய செய்தி